சனி, 15 ஆகஸ்ட், 2009

நாம் வாழும் ராஜ்யம்


சுதந்திரம் அவசியம் கிடைத்து தான் இருக்க வேண்டுமா என்று பலமுறை யோசித்து பார்த்தது உண்டு. சில ஆண்டுகள் கழித்து நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால், ஆங்கிலேயர்கள் செய்த தவறுகளை அவர்களே ஓரளவு சரி செய்து விட்டிருப்பார்காளோ என்று எண்ணி சர்ச்சிலின் தீர்க்க தரிசனத்தினை இன்று வியக்கிறேன்.

நமக்கு கிடைத்த சுதந்திரம் நம்மை எங்கே அழைத்து சென்றது, சென்றுக் கொண்டிருக்கிறது என்று யோசிப்பேன். அதை பிரதிபலிப்பது போல் உள்ளது "கூண்டுக்குள் நம்சுதந்திரம்" என்ற கவிதை. சுதந்திரத்தின் அருமை நமக்கு தெரியவில்லை என காந்தி அன்றே புத்திசாலித்தனமாக ஒதுங்கி விட்டார். அவர சொல்லனும்? சுயராஜ்யத்தை பற்றி சிலாகித்தார். இன்றோ சுயம் அற்றதாக உள்ளது அவர் இல்லாத நாம் வாழும் ராஜ்யம்.