வெள்ளி, 5 ஜூன், 2009

ரத்தத்தின் ரத்தமே

"ஏன்டாப்பா சின்னவனே.... நான் பண்ண பாவம் தான் என் வாரிசுகளுக்கு தமிழ் நாட்ட மட்டும் தான் பிரிச்சு கொடுக்க முடிஞ்சுது. என் வயசை கூட பொருட்படுத்தாம, ரொம்ப அலைகழிச்சு போன போவுதுன்னு மூனு பதவி. அதலயும் ஒன்னு நம்ம ஜால்ரா ஒன்னுக்கு போயிடுச்சு. இந்த நிலைமை இதோட முடிஞ்சிடனும். எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லை. ஆனா கடவுள் என் மேல நம்பிக்கை வச்சு தான், தமிழகத்த எனக்கு கொடுத்தாரு. அவரோடைய நம்பிக்கைய காப்பாத்துற மாதிரி, நாம எல்லாம் நடந்துக்கனும். என் பேர பசங்க எல்லாருக்கும் உன் காலத்துகுள்ள இந்தியவா பிரிச்சு கொடுத்திடு. நம்ம மேல ஒருத்தர் வச்ச நம்பிக்கைய நாம காப்பத்தனும் இல்ல. அதுவும் அது கடவுளா இருக்கிறப்ப?"

கருத்துகள் இல்லை: