JMMS சாந்தி அக்கா: //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//
அந்தப் பதிவின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது. "நான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில்" (http://www.jaffnatoday.com/?
ஆனால் அந்தக் கட்டுரையை கலையரசன் அவர்கள் எழுதவில்லை. அது அல்ல இப்ப பிரச்சனை. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் பலரை அவதானித்து, ஆய்ந்தறிந்து சாந்தி அக்கா அவர்கள் ஒரு கருத்தினைச் சொல்லியுள்ளார்கள். அக்காவிற்கு வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் எத்தனைப் பேரைத் தெரியும் என்று தெரியவில்லை. அவர்களிடம் எல்லாம் ஆய்வு செய்து, பொதுவாய் ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார்கள் போல!!
அந்த ஆய்வறிக்கையை 'பயணமும் எண்ணங்களும்' சாந்தி அக்கா முழுவதும் வெளியிட்டால் தான்.. அக்கா ஈழத்தமிழச்சிகளை வேண்டுமென்றே இழிபடுத்தியுள்ளாரா அல்லது அவர் கண்டுபிடித்து சொன்னது உண்மையா, பொய்யா என தெரியும்.
சொல்வார்களா??
Out of record:
ஈழ படுகொலைகளைப் பற்றி ஒரு குழுமத்தில் விவாதிக்கும் பொழுது...
சாந்தி அக்கா மட்டும் சோனியா காந்தி சார்பாகவும், மற்ற அனைவரும் அவர்களுக்கு எதிராகவும் விவாதித்துள்ளனர்.
"நீங்க எப்படி.. சோனியா காந்தியின் செய்கையை நியாயப்படுத்துகிறீர்கள்?" என்ற பலரது கேள்விக்கு..
சாந்தி அக்கா சொன்ன பதில்.. "சோனியா காந்தி அழகா புடவைக் கட்டுவாங்க".
நீதி: நேர்த்தியாக புடவை அணிந்தவர்கள் கொலைகளுக்கு ஆதரவு தெரிவித்தால், அது நல்லதிற்கே இருக்கும்.
அன்று நடந்த தீவிர விவாதத்தை இன்று அவர்கள், 'பகடிக்காக சொன்னது' என்று சொல்லி தப்பிக்கலாம். ஆனால் சாந்தி அக்காவிற்கு எப்பவுமோ, ஈழத் தமிழர்கள் என்றால் எளப்பம் தானோ என்னவோ!! அதுவும் இந்த விவாதம் நடந்த அன்றைய சூழ்நிலையில், இவருடன் விவாதித்தவர்கள் எப்படி கொதிப்படைந்து போயிருப்பார்கள். நல்லவேளை நான் அந்தக் குழுமத்தில் அப்பொழுது இல்லாமல் போனேன்.
1 கருத்து:
விட்டுத்தள்ளு தினேஷ்...அதை பத்தி தெரிஞ்சதுதானே
கருத்துரையிடுக